Skip to main content

Posts

Showing posts from September, 2021

இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆளுநர்கள்

  எமது இத்தளத்தில் இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆளுனர்கள் எனும் தொடர் கட்டுரையானது 12.09.2021 முதல் வெளிவரவுள்ளது. வரலாறு, அரசறிவியல் பாடத்தை கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், ஆர்வமுடைய ஏனையோருக்கும் இத்தொடர் உதவும் என எதிர்பார்க்கின்றோம். இவ் இணைப்பினூடாக தினமும் புதிய அங்கங்களைப் பார்வையிடலாம்.  பார்வையிட இங்கு அழுத்தவும்

ஜேர்மனியில் நாசிஸத்தின் வளர்ச்சி

1.1 வளர்ச்சிக்கு ஏதுவான காரணிகள் 1. பாசிஸத்தைப்போலவே நாசிஸமும் வளர்ச்சியடைவதற்குரிய பின்னணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு முதலாம் உலகப்போருக்கே உரியது. ஜேர்மனியில் 1918 நவம்பரில் குடியரசு அரசாங்கம் உருவானதுடன் 1919ல் வைமார் அரசியல் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு உருமான வைமார் குடியரசானது தொழிலின்மை, பட்டினி, பஞ்சம் போன்றவற்றுக்குத் தீர்வினைத் தரவில்லை. இதைவிடவும் இத்தகைய புதிய ஆட்சியானது ஜேர்மனிய மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக அமையைவில்லை. இதனால் குடியாட்சிக்கு தேசிய வலதுசாரிகளைக்கொண்ட தேசியகட்சியும், தீவிர இடதுசாரிகளைக்கொண்ட பொதுவுடமைக் கட்சியும்  எதிர்ப்புத் தெரிவித்தது.

இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி

1.1 வளர்ச்சிக்கு ஏதுவான காரணங்கள் 1. முதலாம் உலகயுத்தத்தில் வெற்றிபெற்ற நேச நாடுகளின் அணியில் இத்தாலி இருந்தாலும் யுத்த வெற்றியின் பின்னர் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போனதால் இத்தாலியர் ஏமாற்றத்துக்குள்ளாயினர். குறிப்பாக 1915ல் லண்டன் ஒப்பந்தத்தின் மூலம் நேசநாடுகளால் இத்தாலிக்கு பல பிரதேசங்களை தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாது போனது. இது தொடர்பில் மத்தியதர வர்க்கத்தினரும் தொழில் நிபுணர்களும் பெரும்பாலான மக்களும் உணர்ந்து செயற்பட்டமையே பாசிஸம் வளரக் காரணமானது.