Skip to main content

A/L History

வரலாறு - அறிமுகம்

வரலாறு என்பது சமூக மனிதனின் கடந்த காலத்தை பல்வேறு கோணங்களிலும் பகுப்பாய்வு செய்து அதன் தற்கால அபிவிருத்திகளையும் எதிர்கால நம்பிக்கைகளையும் கற்கும் பாடமாகும். இதனால் மூலாதாரங்களின் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு கற்பது இக்கற்கையில் முக்கியம் பெறுகிறது. வரலாற்று அறிவு இல்லாது நாம் எமது சமுகம், சமயம், விழுமியங்கள், மரபுகள், அரசியல், நிர்வாகம் போன்ற பலவற்றின் பின்னணியினை சரிவர விளங்கிக் கொள்ள முடியாது. 

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது ஆரம்ப கற்காலத்தையும் மத்திய கற்காலத்தையும் உள்ளடக்குகிறது. இக்காலத்திலேயே இலங்கையில் ஆரம்ப குடியேற்றங்களும் தோற்றம் பெற ஆரம்பித்தன. இங்கு ஆரம்ப கற்காலம் என்பது தாழ் ஆரம்ப கற்காலம், இடை ஆரம்ப கற்காலம், உயர் ஆரம்ப கற்காலம் என மேலும் மூன்றாக பிரித்து நோக்கப்படுகிறது.


Comments

  1. வினாக்களுக்கான விடைகள் கிடைக்க பெறுமா

    ReplyDelete
  2. Thank u so much sir niraiye vidayem ugaltta irunthu peytrukonden sir pls sml hlp sir enkku irasarattai kala nagareekam patrye notes poduga sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.