Skip to main content

குருணாகலையின் இலக்கிய வளர்ச்சி

குருநாகல் காலத்து இலக்கியம் தம்பதெனிய இலக்கியத்தை விட சற்று பின்தங்கியே உள்ளது. அக்கால நூல்களில் வெளிப்படுத்தப்பட்ட விதிகளும் மரபுகளும் படிப்படியாகக் குறைந்து வரும் இலக்கியத்தின் பண்புகளைக் காட்டுகின்றன. 

குருணாகலை இராசதானியின் நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலம் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்விமானான பௌத்த பிக்கு ஒருவரை சோழ நாட்டிலிருந்து வரவழைத்த இம்மன்னன் அத்தேரரின் மூலம் ஜாதக நூலொன்றை எழுதுவித்து பிற்காலத்தில் கல்விமான்களின் மத்திய நிலையமாக விளங்கிய விதாகம ஸ்ரீ கணானந்தா பிரிவெனாவை உருவாக்கி பௌத்த பிக்குகளுக்கு அர்ப்பணித்துள்ளான். 


ஜாதகக் கதைகளை சிங்களத்துக்கு மொழிபெயர்த்ததன் மூலம் உருவான 'சிங்கள ஜாதகப் புத்தகம்' எனும் நூலை வெளியிடுவதற்கு அந்நூலாசிரியருக்கு மன்னன் அனுசரணை வழங்கியுள்ளான். 


பாளி மொழியிலான ஜாதகக் கதைப் புத்தகம் பெரும்பாலும் இந்திய சமூகவமைப்பையும் சமூக சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்ட நூலாக அமைந்த போதிலும் 'சிங்கள ஜாதகப் புத்தகம்' அல்லது 'பன்சீய பனஸ் (550) ஜாதகக் கதைகள்' எனும் நூல் இலங்கை மக்களின் வாழ்க்கையையும் சமூகவமைப்பையும் பிரதிபலிக்கும் நூலாக அமைந்திருந்தது என்பது கல்விமான்களின் கணிப்பாகும். 


நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் வேண்டுகோளின் பேரில் தம் ரூ தம் பசங்கினா என்பவரால் எழுதப்பட்ட 'தலதா சிறித' எனும் நூல் புனித தந்ததாதுவின் வரலாற்றையும் அதற்கான வணக்க வழிபாட்டு முறைகளையும் விளக்கும் நூலாகும். குருணாகலை யுகத்தில் வாழ்ந்த பிரபல்யமான பண்டிதரும் களனி விகாரையின் தலைமைப் பிக்குவுமான வில்கம்முல ஸ்ரீ பராக்கிரம மகா தேரரால் 'எலு போதி வம்சம்' மற்றும் 'அநாகதவம்சம் எனும் இரு நூல்கள் இயற்றப்பட்டன. 


முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் இறுதிக் காலப் பகுதியிலிருந்து நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் காலம் வரையிலான வரலாற்றுத் தகவல்களுடன் கூடிய மகாவம்சத்தின் மூன்றாம் பாகம் (சூளவம்சத்தின் இரண்டாம் பாகம்) எழுதப்பட்டதும் இக்காலப் பகுதியிலாகும். இவை தவிர சீலவங்ச எனும் பிக்குவால் எழுதப்பட்ட ‘தாது மஞ்சுசா' எனும் பாளி இலக்கண நூலும் குருணாகல் இராசதானிக் காலத்துக்குரியதாகும்.


Comments

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.